Tuesday, July 16, 2024

கிண்ணியா அமீர் அலி

 தீரன்


நூரெனு மொளியை நாடி 

நூறுபா யாக்கு மெங்கள் 

தீரனார்க் கெம்து ஆக்கள்!

ஜும் ஆமுபா றக்குஞ் சேர்த்து..!


காரணக் கலிமாக் கல்பால் 
\ஹக்கெனுஞ் சத்தி யத்தைப்
பூரண மாகத் தேடும் 
புலவநும் புலமை வாழ்க!

தோரண வாழ்வுத் தோப்புத் 
தொடர்வாசங் கரையும் மாயைக் 
காரண மறிந்த ஞானக் 
கவிதீரன் மேன்மை வாழ்க! 
o
கிண்ணியா அமீர் அலி 

Wednesday, July 10, 2024

எஸ். ஏ. கப்பார் (காவியன்)

 

எஸ். ஏ. கப்பார் (காவியன்)

கல்முனைப் பிரதேசத்தில் இருந்து 1974 தொடக்கம் இலக்கியப் பசிக்குத் தீனி போட்ட சஞ்சிகைகளில், 1978 ஆம் ஆண்டு எஸ். ஏ. கப்பார் (காவியன்) அவர்களின் வெண்ணிலா, 1983ஆம் ஆண்டு ஆர். எம். நௌஸாத் (தீரன்) அவர்களின் தூதூ, 1983 ஆம் ஆண்டு எம். சி. ஏ. பரீத் (ஸ்டார் பரீத்) அவர்களின் கோகிலம் ஆகிய மூன்று சஞ்சிகைகளும் மறக்க முடியாத கலை இலக்கிய சஞ்சிகைகளாக அதுவும் அச்சு இதழ்களாக வெளிவந்தன. இந்த மூன்று சஞ்சிகைகளினது ஆசிரியர்கள் மூவரும் ஆரம்பத்தில் கவிஞர்களாகவே உருவெடுத்தனர். பின் மூவரும் சிறுகதை எழுத்தாளர்களாகப் பரிணமித்தனர். ஆர். எம். நௌஸாத் ஒரு படி மேலே சென்று நாவலாசிரியராகவும் இலக்கிய விமர்சகராகவும் திகழ்கிறார்.

இதில் சிறப்பு என்னவென்றால் மூவரும் இன்றுவரை எழுதி வருபவர்கள். இன்றுவரை நண்பர்களாகவே இருப்பவர்கள். எங்கு கண்டாலும் மச்சான் என விழித்துக்கொள்பவர்கள்.
நிற்க, எனது சிறுகதைத் தொகுதியான 'அப்பாவின் டயரி' நூல் பற்றிய நண்பன் ஆர். எம். நௌஸாத் அவர்களின் இந்த சிறப்புப் பார்வை உண்மையில் எனக்கு மட்டில்லா மகிழ்ச்சியளிக்கிறது. அவருக்கு எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவிப்பதில் பெரும் மகிழ்ச்சியடைகிறேன். மிக்க நன்றி.

Saturday, December 23, 2023

ஜே.வஹாப்தீன்

 

ஜே.வஹாப்தீன் -

வெள்ளிவிரல் மின்னுகின்ற தீரன்

வெட்டவெளிக் காற்றினிலே பாரன்
சொல்லினிலே கலைசெய்து
சோக்கான கதைபுனைய
தென்கிழக்கில் இவர்தானே சூரன்.


ஜின்னாஹ் ஷரிபுத்தீன்

 

காப்பியக்கோ ஜின்னாஹ் ஷரிபுத்தீன்

தமிழுக்குக் கிட்டியதோர் செல்வமே தீரன் 

அமிழ்தினிய ஆக்கங்கள் செய்வான் – உமிகடைந்த 

நெல்லுக் குவப்பாகும் நற்றமிழின் தேறல்கள் 

வல்லவன் வாழிபல் லாண்டு.

 

ஜிப்ரி ஹாசன்

 

ஜிப்ரி ஹாசன்

 தமிழ் இலக்கியவெளியில் தமிழ் முஸ்லிம்களின் வாழ்வியலை ஆழ்ந்த புனைவுத் தன்மையுடன் வெளிப்படுத்தும் ஈழத்தின் ஒரே கதைசொல்லி தீரன். ஆர்.எம். நௌஷாத். தோப்பில் முகம்மது மீரான், கீரனூர் ராகிர்ராஜா போன்ற படைப்பாளிகளின் வரிசையில் இடம்பெறக்கூடியவர். தமிழின் பல விருதுகளும், பரிசுகளும் இவருக்கு கிடைத்துள்ளன.

தீரனின் ஒட்டுமொத்தப் படைப்புகள் மீதும் விரிந்த பார்வையை முன்வைக்க வேண்டும். அதற்கான முயற்சியில் நானும் இருக்கிறேன். தமிழகத்திலுள்ள பல படைப்பாளிகளை விஞ்சி நிற்பவர். இலங்கை என்பதற்காக எத்தனை மூடி மறைப்புகள்.

0

ஜிப்ரி ஹாசன்

தீரனின் ஒட்டுமொத்தப் படைப்புகள் மீதும் விரிந்த பார்வையை முன்வைக்க வேண்டும். அதற்கான முயற்சியில் நானும் இருக்கிறேன். தமிழகத்திலுள்ள பல படைப்பாளிகளை விஞ்சி நிற்பவர். இலங்கை என்பதற்காக எத்தனை மூடி மறைப்புகள். நாம் இந்த விடயத்தில் இணைந்தே பயணிக்கலாம்.

 

வனம்- மின்னிதழ்

 

மொழி வழி கூடுகை 2022

வனம்- ஆதிரை

விருந்தினர் - 03 தீரன் நௌஷாத்

 

 

தீரன் ஆர். எம். நௌஷாத் கிழக்கின் நிலவியல் குறித்து மிக நேர்த்தியான கதைகளை வாசிப்புலகிற்கு தந்தவர். தனக்கான கதை மொழியினை வடிவமைத்ததிலும், மண்வாசனைச் சொற்களில் பிரத்தியேக கவனத்தினைச் செலுத்தியதும் தீரனின் தனித்த அடையாளமாக இலக்கியப் பரப்பில் விசாலமாகியது. தீரனின் கதைகள் முழுக்க உலாவித்திரிந்த மாந்தர்கள் வாசகர்களிடம் மிக அண்டிய உறவினை பேணிக் கொண்டார்கள். தீரனின் கதைகளைப் போல கவிதைகளும் மேம்பட்ட அரசியலினை கொண்டியங்கியது.

 

வபா பாறூக்

 

வபா பாறூக்


மருதூரின் மனிதம் மிக்க கலைமுகம்
சர்வதேச தமிழ் அடையாளங்களில் ஒன்று
எனது பாடசாலைக்கால நண்பன் வாழ்த்துக்கள்