மொழி வழி கூடுகை 2022
வனம்- ஆதிரை
விருந்தினர் - 03 தீரன் நௌஷாத்
தீரன் ஆர். எம். நௌஷாத் கிழக்கின் நிலவியல் குறித்து மிக நேர்த்தியான கதைகளை
வாசிப்புலகிற்கு தந்தவர். தனக்கான கதை மொழியினை வடிவமைத்ததிலும், மண்வாசனைச் சொற்களில்
பிரத்தியேக கவனத்தினைச் செலுத்தியதும் தீரனின் தனித்த அடையாளமாக இலக்கியப்
பரப்பில் விசாலமாகியது. தீரனின் கதைகள் முழுக்க உலாவித்திரிந்த மாந்தர்கள்
வாசகர்களிடம் மிக அண்டிய உறவினை பேணிக் கொண்டார்கள். தீரனின் கதைகளைப் போல
கவிதைகளும் மேம்பட்ட அரசியலினை கொண்டியங்கியது.
No comments:
Post a Comment