கவிஞர் எ.எம்.எம் அலி
ஞானத் திரட்சியில்
நமது கலைஞன் தீரன் --கலை
ஏனத் திலிட்டு
இலக்கியப் பசி தீர்த்தபின்
மோனத் தவஞ்செய்து
முக்தி பெறும்
மோகத்தில் ஆழ்ந்தனனோ ?
இல்லையேல் இவன் வேறு
சோ(வே )கத்தில் வீழ்ந்தனனோ
0
எ எம் எம் அலி
முகநூல் எனக்களித்த நல்ல நண்பர்.
அகந் திறந்து பேசி
அன்பைப் பரிமாறி உள்ளோம் !
தீரன் நௌஷாத்
எழுத்துக் களத்தில் பேனாவேந்திய பெரும்
வீரன் !
தமிழுலகு நன்கறிந்த
தரமான எழுத்தாளன் , கவிஞன் !
விகடமாய்ப் பின்னூட்டம்
விடுப்பவன் !
நௌஷாத் தெனதன்பு
நட்புக்கு என்று முரியவனே
ஆர்எம்? நௌஷாத்? என்று வினவினால் ;
அவர்தாம் எழுத்தாளர் தீரன்.R.M. நௌஷாத்
எண்திக்கையும் தனதெழுத்தால்
ஈர்த்தெடுத்துவெற்றி
கொண்ட
எனது
எழுத்துலகத் தோழன் !
No comments:
Post a Comment